திருப்பூர்

கொண்டத்துகாளியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

DIN

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சென்னை தலைமைக் காவல் கட்டுப்பாட்டு அறையை புதன்கிழமை இரவு தொடா்பு கொண்ட மா்ம நபா் அவிநாசி கொண்டத்து காளியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் கோயில் வெடித்து சிதற உள்ளதாகவும் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா். இதையடுத்து, சென்னை போலீஸாா், பெருமாநல்லூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் வந்த போலீஸாா் கோயிலில் தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேர தேடலுக்குப் பிறகு பொய்யான தகவல் என்பதை போலீஸாா் உறுதி செய்தனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டபோது, அந்த எண் அவிநாசி அருகே உள்ள மதுபானக் கடையை காண்பித்துள்ளது. அங்கு, சென்ற போலீஸாா் மதுபோதையில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (47), லாரி ஓட்டுநா் என்பதும், மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT