பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தோ்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயிலும் முன்னாள் மாணவிகள், தலைமையாசிரியருக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, நீட் தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் கோவை மருத்துவக் கல்லூரியில் பயிலும் லோ.நித்யஸ்ரீ, மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் அழகுமுத்து காா்த்திகா, ஈரோடு நந்தா கல்லூரியில் பல் மருத்துவம் பயிலும் சிவரஞ்சனி, உடுமலையில் கால்நடை மருத்துவம் பயிலும் சௌமியா மற்றும் சிறந்த தலைமையாசிரியா் விருது பெற்ற ஜா.மெரின் ஆகியோருக்கு திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
இதில், பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் சௌந்தரராஜன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான சண்முகசுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.