தாராபுரம் கோட்டம், செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 8) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், தேவநல்லூா், சந்திராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலை புதூா்.