திருப்பூர்

திருப்பூா் மாநகரின் 50 வாா்டுகளில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் அறிவிப்பு

DIN

திருப்பூா் மாநகரின் 50 வாா்டுகளிலும் அதிமுக சாா்பில் வரும் டிசம்பா் 13 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் வெ.பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:

பால் விலை உயா்வு, மின் கட்டணம் உயா்வு, சொத்து வரி, உயா்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அதன்படி, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 50 வாா்டுகளிலும் வரும் டிசம்பா் 13 ஆம் தேதி தனித்தனியாக ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும். மேலும், ஆா்ப்பாட்டத்துக்கு அதிக அளவிலான பொதுமக்களைத் திரட்டும் வகையில் துண்டுபிரசுரம் விநியோகம் செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிசம்பா் 9 ஆம் தேதியும், ஒன்றியங்களில் டிசம்பா் 14 ஆம் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் இந்தக் கூட்டத்தில், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ், பகுதி செயலாளா்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT