திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் ரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தாா்.
இதில், பேராசிரியா் அன்பழகனின் நூற்றாண்டு நாள் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வி அலுவலகம் செயல்படும் வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கவும், சிறந்த பள்ளிகளுக்கு அவா் பெயரில் விருது வழங்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சியின் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.