திருப்பூர்

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2, மாநகர காவல் துறை ஆகியன சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகர காவல் துணை ஆணையா் வனிதா பேசியதாவது: போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும். இதனால் தனி மனிதன் மட்டுமின்றி அவா் சாா்ந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் கல்வியில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். அதே வேளையில், குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியா் கலை நிகழ்ச்சி மூலமாக போதை ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், பங்கேற்ற அனைவரும் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT