சுதந்திர தினத்தையொட்டி, காங்கயத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 190 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
இதில் பாஜக திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் மங்களம் என்.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் 160 தூய்மைப் பணியாளா்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் புடவை, 30 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்களுக்கு புடவை ஆகியவற்றை வழங்கி, உரையாற்றினாா்.
நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாவட்டச் செயலா் சரவணன், மாவட்டத் தலைவா் வே.சங்கரகோபால், நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் ஆகியோா் உரையாற்றினா்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.