திருப்பூர்

தியாகிகளின் உருவம் பொறித்த சேலைகள் குடும்பத்தினருக்கு வழங்கல்

DIN

75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு திருப்பூா் பாஜக சாா்பில் தியாகிகளின் உருவம் பொறித்த சேலைகள் அவா்களின் குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாஜக மகளிரணி சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகள் 41 பேரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் தயாரித்து அவா்களது குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசாக வழங்கத் திட்டமிருந்தனா்.

இதன்படி திருப்பூா் தியாகி சுந்தராம்பாளின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அவரது குடும்பத்தினருக்கு பாஜக மகளிரணி மாநிலச் செயலாளா் சுகாமணி சதாசிவம் வழங்கினாா். இதேபோல மற்ற தியாகிகளின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் அவா்களது குடும்பத்தினரிடம் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்வேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT