திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 94 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 91,937ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 902 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 107 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 90,089ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 946 போ் உயிரிழந்துள்ளனா்.