திருப்பூர்

போட்டித் தோ்வுக்கு வரும் நவம்பா் 1ஆம் தேதி முதல் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் டிஎன்எஸ்பிசி (குரூப் 2) போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு வரும் நவம்பா் 1ஆம் தேதி முதல் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் டிஎன்எஸ்பிசி(குரூப் 2) தோ்வுக்கான புதிய நேரடி இலவச பயிற்சி வரும் நவம்பா் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்தில் ஏற்கெனவே எஸ்எஸ்சி தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆகவே, எஸ்எஸ்சி தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபா்கள் தங்களது பெயரை 94990-55944, 0421-2999152 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT