திருப்பூர்

வாகன விபத்து: ஒருவா் பலி

DIN

பல்லடம் அருகே பொங்கலூரில் காா் கவிழ்ந்து கோழிப்பண்ணை உரிமையாளா் உயிரிழந்தாா்.

தாராபுரம் என்.ஜி.ஒ. காலனியைச் சோ்ந்தவா் சிவபிரகாஷ் (48). இவா் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தாா்.

மேட்டுப்பாளையம் சென்று விட்டு பல்லடம் அவிநாசிபாளையம் வழியாக தாராபுரத்துக்கு வெள்ளிக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பொங்கலூா் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த சிவபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT