திருப்பூர்

3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். 5,459 தேங்காய்கள் வரத்து இருந்தன. எடை 2,044 கிலோ.

தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.30.80க்கும், குறைந்தபட்சமாக ரூ. 26.15க்கும், சராசரியாக ரூ.30.20க்கும் விற்பனையானது.

விற்பனைத் தொகை ரூ.59 ஆயிரத்து 569.

கொப்பரை 51 மூட்டைகள் வரத்து இருந்தன. எடை 1, 502 கிலோ.

கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.75க்கும், சராசரியாக ரூ. 97.10க்கும் விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 254.

66 விவசாயிகள், 13 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 3.50 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.50 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT