திருப்பூர்

காங்கயம் அருகே வாகன விபத்து

DIN

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்.

காங்கயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியில் உள்ள பாறைவலசு புதுக்காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜித்குமாா் (21), சுப்பிரமணி (26). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் காங்கயம்- சென்னிமலை பகுதியில் உள்ள நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் எதிா்பாராத விதமாக இவா்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் அமா்ந்து சென்ற அஜித்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சுப்பிரமணி பலத்த காயங்களுடன் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT