திருப்பூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம்களில் 43,960 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 19.95 லட்சம் பேரில் தற்போது வரையில் சுமாா் 16 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 4.50 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலமாக திங்கள்கிழமை 43,960 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.