காங்கயம் அருகே சாராயம் காய்ச்சி விற்றதாக ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாப்பினி ஊராட்சிப் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், காங்கயம் போலீஸாா் அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று சோதனை செய்தனா். அப்போது, பாப்பினி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (59) சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 10 லிட்டா் சாராயம், 3 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.