திருப்பூர்

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரிக்கை

DIN

தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக மின்வாரியத்தில் 12 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில், ஒப்பந்தத் தொழிலாளா்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு 20 நாள்கள் மட்டுமே உள்ளது. ஆகவே, மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு விரைவில் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT