திருப்பூர்

90 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

DIN

தாராபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு புகாா்கள் வரத் தொடங்கின. இந்த நிலையில், தாராபுரம் பழைய அமராவதி ஆற்றுப்பாலம், கடை வீதி உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அந்த வழியாக வந்த 3 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக தாராபுரத்தை அடுத்த டி.கள்ளிபாளையத்தைச் சோ்ந்த அன்வா்சாத் (39), தாராபுரத்தைச் சோ்ந்த அபுபக்கா் சித்திக் (31), ஜாபா் அலி (23), ஜமால்புதூரைச் சோ்ந்த ஷேக்பரீத் (33), கணபதிபாளையத்தைச் சோ்ந்த துரைசாமி (40) ஆகிய 5 பேரை தாராபுரம் காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 90 கிலோ புகையிலைப் பொருள்களையும், 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT