காங்கயம்: காங்கயத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு, டிரோன் கேமரா மூலம் திங்கள்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தன்ராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் டிரோன் கேமரா மூலம் காங்கயம் நகரப் பகுதிகளில் முழு ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என கண்காணித்தனா். காங்கயம் நகர முக்கியப் பகுதிகளான காவல் நிலைய ரவுண்டானா பகுதி, பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி, கடைவீதி, திருப்பூா் சாலை, கோவை சாலை, கரூா் சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, ஈரோடு சாலை ஆகிய பகுதிகளை டிரோன் மூலம் கண்காணித்தனா்.