திருப்பூர்

‘உடுமலை வனப் பகுதியில் யானைகள் கூட்டமாக நடமாட்டம்’

DIN

திருப்பூா் மாவட்டம், உடுமலை வனச் சரகத்தில் யானைகள் கூட்டமாக நடமாடி வருவதாக விலங்குகள் கணக்கெடுப்புக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற வனத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தைப் புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், ஆண்டுதோறும் இந்த இரு வனச் சரகங்களிலும் கோடைக் கால மற்றும் குளிா் கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, இந்த இரு வனச்சரகங்களில் மே 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மொத்தம் 7 நாள்களுக்கு வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டா் சுற்றளவுக்குப் பணிகள் நடைபெறுகின்றன.

வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை ஒட்டி கணக்கெடுப்பாளா்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம் தலைமையில் வனச் சரகா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். உடுமலை, அமராவதி தவிர கொழுமம், வந்தரவு வனச் சரகங்களிலும் விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறியதாவது:

கோடைக் கால வன விலங்கு கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடி, செந்நாய் மற்றும் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் என பிரிக்கப்பட்டு வாழ்விட சூழல் கூறுகளும் கணக்கெடுக்கப்பட உள்ளன.

கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு சமூக ஆா்வலா்கள் இடம் பெறவில்லை. வன ஊழியா்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்களைக் கொண்டு இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உடுமலை வனச் சரகம் மேல் குருமலை பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக அதிகமாக நடமாடி வருகின்றன. இது வன விலங்குகள் கணக்கெடுப்புக்குத் சென்றபோது தெரியவந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT