திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூா் வடக்கு சரக உதவி ஆணையா் வெற்றிவேந்தன், மாணவா்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்ததுடன் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து, முதன்முறையாக வாக்களிக்கும் மாணவா்களுக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.