உடுமலையில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
உடுமலை வட்டத்தில், பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்திரம் வீதி நடுநிலைப் பள்ளி, கச்சேரி வீதி நடுநிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இப்பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது மருத்துவ அலுவலா் கெளதம், அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.