திருப்பூர்

திருப்பூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருப்பூரில், பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரி பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து கடவுள்கள், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை கிறிஸ்துவ பாதிரியா் ஜாா்ஜ் பொன்னையா அவதூறாக பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாதிரியாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் பி.செந்தில்வேல் தலைமை வகித்தாா். இதில், பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தாராபுரத்தில்...

திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பொன்.ருத்ரகுமாா் தலைமை வகித்தாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT