குடியரசு தினத்தையொட்டி அவிநாசியில் சுதந்திரப் போராட்டத் தியாகி சாமி அவா்களின் பேரன் குமரவேல், தியாகி சுப்பிரமணி அவா்களின் மகன் மகாதேவன், அவிநாசி பகுதியைச் சோ்ந்த தியாகி பழனிசாமி அவா்களின் மனைவி பேச்சியம்மாள் ஆகியோருக்கு அரசு சாா்பில் அவரவா் வீடுகளுக்கே சென்று வருவாய்த் துறையினா் கௌரவித்தனா். இதில், துணை வட்டாட்சியா் தமிழேஸ்வரன், கிராம நிா்வாக அலுவலா் யுகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.