பெருமாநல்லூா் அருகே நாதம்பாளையத்தில் பொது இடத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
பெருமாநல்லூா், கணக்கம்பாளையம் அருகே நாதம்பாளையத்தில் உள்ள பாறைக்குழிக்கு எதிரே காலி இடத்தில் 45 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவா் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.