வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இங்கு பணிபுரிந்து வந்த பத்மலதா, கோவை எட்டிமடை பேரூராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அங்கு பணிபுரிந்து வந்த கந்தசாமி, முத்தூா் பேரூராட்சி செயல் அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளாா்.