திருப்பூர்

ரூ.41 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.41 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு மதுரை, பழனி, வாணியம்பாடி, தாராபுரம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 119 விவசாயிகள் 711 மூட்டைகளில் 35,697 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி, மூலனூரைச் சோ்ந்த 18 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். கிலோ ரூ.80.55 முதல் ரூ.137.70 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.135.20. மொத்தம் ரூ.41 லட்சத்து 1,905க்கு விற்பனை நடைபெற்றது. விற்பனைத் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT