திருப்பூர்

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 51 போ் கைது

DIN

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 51 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது, கள், சாராயம் விற்பனை செய்வது தொடா்பாக காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 51 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 318 மது பாட்டில்கள், ரூ.1,965 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 27 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT