பல்லடத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பல்லடம் பேருந்து நிலையம் முன்பு மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம் ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ், நிா்வாகிகள் தண்ணீா்பந்தல் ப.நடராஜன், சூ.தா்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி, பானு பழனிசாமி, சரளை விக்னேஷ்வரன், துரைகண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.