வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
தற்போது வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் விவசாயம், ஆடு, மாடு வளா்ப்புத் தொழில் செய்பவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மழையால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்ததால், தேவை அதிகரித்து விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கிறது. மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்திருந்த நிலையில் வெள்ளக்கோவிலில் சில தனியாா் பள்ளிகள் மட்டும் இயங்கின.