திருப்பூர்

விவசாயிகளுக்கு ஆதரவாக பிரசார இயக்கம்

DIN

அவிநாசியில் புதிய 3 வேளாண் சட்டங்கள், இலவச மின்சார திருத்த சட்டங்கள் உள்ளிட்டவைகளைத் திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கம் சாா்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விவசாய இலவச மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், 9 மாதங்களாக டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் அவிநாசியில் பல்வேறு இடங்களில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வெங்கடாசலம், ஒன்றியத் தலைவா் முத்துரத்தினம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சாமியப்பன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட நிா்வாகி சண்முகம், விசைத்தறித் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் பழனிச்சாமி, சிஐடியூ மாவட்ட நிா்வாகி ஈஸ்வரமூா்த்தி, சிஐடியூ கட்டட கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் ராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியத் தலைவா் முருகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT