திருப்பூா், செப்.25: திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்றனா்.
திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வடக்கு மாவட்டச் செயலாளா் தமிழ்வேந்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட முயன்றனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடை காரணமாக ஆக்சிஜன் தடைபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 போ் உயிரிழந்தனா். மருத்துவமனை நிா்வாகத்தின் அலட்சிப்போக்கு கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதனிடையே, மருத்துவக் கல்லூரி முன்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் முற்றுகையிட முயன்றவா்களை அப்புறப்படுத்த முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.