திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவா் வேலூா் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவா் வேலூா் இப்ராஹிம் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா், பெரியாண்டிபாளையம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாகனப் பிரசாரம் மேற்கொண்டாா்.
பின்னா் இரவு தங்கும் அறைக்குச் சென்றபோது, அவரின் செல்லிடப்பேசிக்குத் தொடா்பு கொண்ட மா்ம நபா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் வேலூா் இப்ராஹிம் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடையைச் எஸ்.முஹம்மது பாசித் (28) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.