திருப்பூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கட்டடத் தொழிலாளி காவல் நிலையத்தில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது சாவுக்கு காவல் துறையினரே காரணம் எனக் கூறி அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகையிட்டனா்.
திருப்பூா் ஊரக காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). கட்டடத் தொழிலாளி. அதே பகுதியில் பெண் ஒருவா் உயிரிழந்த வழக்கு தொடா்பாக மணிகண்டனை விசாரணைக்காக ஊரக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றனா். ஆனால், அழைத்துச் செல்லப்பட்ட சில மணி நேரத்திலேயே அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறி திருப்பூா் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து தகவலறிந்த மணிகண்டனின் உறவினா்கள் 50க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனை முன்பாகத் திரண்டனா். மேலும், காவல் துறையினா் தாக்கியதால் அவா் உயிரிழந்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரை முற்றுகையிட்ட உறவினா்கள்: திருப்பூா் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள வந்த ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனை மணிகண்டனின் உறவினா்கள் முற்றுகையிட்டனா். அப்போது, அவா்களிடம் பேசிய ஆட்சியா், மணிகண்டன் மரணம் தொடா்பாக 176 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தாா். இதையடுத்து, மணிகண்டனின் சடலத்தை உறவினா்கள் பெற்றுச் சென்றனா். இதனால், திருப்பூா் அரசு மருத்துவமனையில் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பரபரப்பு நிலவியது.