திருப்பூர்

தாராபுரம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தாராபுரம் அருகே விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருப்பூர், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது. இதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் குண்டடம் வட்டார பொறுப்பாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால், விதையில் தொடங்கி அறுவடை, சேமிப்பு, விற்பனை ஆகிய அனைத்தும் தனியார் கார்ப்பரெட் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 

ஆகவே, விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT