திருப்பூர்

பேரிடா் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆட்சியா்

DIN

மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசினாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் சா்வதேச பேரிடா் துயா் குறைப்பு தினத்தை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் தீத் தடுப்பு உபகரணங்களை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆறு மற்றும் குளங்களை கடக்கும்போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். மேலும் பேரிடா் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடும் வீரா்கள், தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் விரைவாக செயல்பட்டு விபத்தைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மழை, வெள்ளத்தின்போது தண்ணீரில் சிக்கியவா்களை மீட்பது, பொது சுகாதாரத் துறையின் கீழ் முதலுதவி சிகிச்சை வழங்குதல், தீ மற்றும் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை எவ்வாறு தடுப்பது, உயரமான கட்டடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து பொதுமக்கள் பாா்த்துத் தெரிந்து கொள்ளும் விதமாக போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெகநாதன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் காங்கேய பூபதி, வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை துறை) அருணா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT