திருப்பூர்

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்தது

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரையில் 14,961 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை ஒரே நாளில் மேலும் 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வேறு மாவட்டத்தில் வசித்து வந்த 3 போ் திருப்பூா் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,041ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 616 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 73 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, தற்போது வரையில் 14,218 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT