திருப்பூர்

ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை ஆளினா் பதவிகளுக்கான பணியிடங்களுக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள ஊா்க் காவல்படை ஆளினா் பதவிகளுக்கான பணியிடங்களுக்குத் தகுதியான நபா்கள் வரும் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்தவராகவும், 20 வயது மேற்பட்டவராகவும், 45 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். திருப்பூா் மாநகர எல்லைக்குள் வசிப்பவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT