திருப்பூர்

காங்கயம் அருகே திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு வரவேற்பு

DIN

காங்கயம்: காங்கயம் அருகே நத்தக்காடையூரில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை ஊராட்சியில் உள்ள சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராட்சி மைய நிர்வாக இயக்குநரான கார்த்திகேய சிவசேனாபதி தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, தி.மு.கவில் புதிதாக சுற்றுச்சூழலுக்கு என்று ஒரு அணியை உருவாக்கி, அந்த அணிக்கு மாநில செயலராக நியமித்ததற்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்து வாழ்த்துக்களைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு வந்த கார்த்திகேய சிவசேனாபதிக்கு, நத்தக்காடையூர் கடைவீதியில் காங்கயம் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், காங்கயம் திமுக வடக்கு ஒன்றிய செயலர் என்.எஸ்.சிதம்பரம் தலைமையில், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர் முன்னிலையில் தி.மு.க வினர் ஏராளாமானோர் மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள், பொதுமக்களுக்கு 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT