திருப்பூர்

3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக்கோழி வழங்கப்படும்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

DIN

வரும் இரண்டு மாதத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு வெள்ளாடு, நாட்டுக்கோழி வழங்கப்படும் என்று பல்லடத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வந்தார்.

அப்போது அவரை சந்தித்து தே.மு.தி.க. திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தன், பொங்கலூர் ஒன்றிய துணைச்செயலாளர் சிவானந்தம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லோகநாதன்,தொங்குட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா நடராஜன் உள்பட 300 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். 

அதைத் தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முன்உதாரணமான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொது மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை செயல்படுத்துவதில் துறை ரீதியாக போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்கள் செயல்படுத்தி வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து, “தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் கட்டுமானப் பணி 75 சதம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் பல்லடத்தில் தான் அதிகம் உள்ளன.

அதனால் புணேவிற்கு அடுத்தபடியாக பல்லடத்தில் ரூ.13 கோடி மதிப்பில் கோழியின ஆராய்ச்சி மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது அதனை எஃகு கோட்டையாக மாற்றப்படும்.  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. நிறுவனம் சார்பில் 10 லட்சம் செட் அப் பாக்ஸ்கள் டெண்டர் திறக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்படவுள்ளது.

அதன் பின்னர் விரைவில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். ஜெயலலிதா குறிப்பிட்டத்தது போல் அதிமுக நூறு ஆண்டுகளை கடந்தும் இருக்கும் இயக்கம் எங்களுக்கு மக்களுக்கு சேவை பணி செய்வது தான் வேலை. அதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை பொதுமக்கள் தருவார்கள்” என்றார்.

உடன் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன்,கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூர்த்தி, கேத்தனூர் வி.ஹரிகோபால் உள்பட பலர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT