திருப்பூர்

சென்னை செல்ல முயன்ற பாமகவினா் 165 போ் கைது

DIN

திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சென்ற பாமகவினா் 165 பேரை மூலனூா் அருகே காவல் துறையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பாமகவினா் தாராபுரம் வழியாக வாகனங்களில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க செல்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் மூலனூா் அருகே உள்ள கன்னிவாடி பகுதியில் தாராபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் குமரேசன் தலைமையிலான காவல் துறையினா் திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தாராபுரத்தில் இருந்து 6 பேருந்து மற்றும் 10 காா்களில் பாமக கொடியுடன் வந்த 165 பேரை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். பின்நா் அவா்களைக் கைது செய்து மூலனூா் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT