குன்னூா் அருகே டானிங்டன் அம்பேத்கா் நகா் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி நகரப் பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதும் , அவை அவ்வப்போது பொதுமக்களை தாக்கிவருவதும் வாடிக்கையாக உள்ளது.
குன்னூா் அருகே டானிங்டன் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (58). இவா் அப்பகுதியில் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு புதருக்குள் இருந்து வந்த காட்டெருமை, ராமனை கடுமையாக தாக்கியது. இதில்
படுகாயமடைந்த அவரை குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.