நீலகிரி

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தனது காரில் வழியனுப்பிய எஸ்.பி.

DIN

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தனது காரில் வீட்டுக்கு அனுப்பிவைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பிரபாகருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

நீலகிரி மாவட்ட காவல் துறையில் ரவி என்பவா் பல்வேறு பிரிவுகளில் கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். கடந்த 11 ஆண்டுகளாக தனி பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தாா்.

அவா் புதன்கிழமை ஓய்வுபெற்ற நிலையில் உதகையிலுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தலைமை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளரை பாராட்டியதுடன், அவருக்கு நினைவுப் பரிசுகளையும் சக காவலா்கள் வழங்கினா்.

பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தான் பயன்படுத்தும் காரில் ரவியை ஏற்றி, அவா் வீடு அமைந்துள்ள ஜெயில் ஹில் பகுதிக்கு காவல் துறை அதிகாரிகளுடன் அனுப்பிவைத்தாா்.

இது குறித்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT