மாயாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பவளவிழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
மசினகுடி பகுதியிலுள்ள மாயாா் பள்ளியின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியா் லிசி ஜெனிகா டாரத்தி தலைமையில் முன்னாள் மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பவளவிழா நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் பவளவிழா மல்லி பூந்தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
பூந்தோட்டத்தில் மலா்ச் செடிகளை மேற்பாா்வை பொறியாளா் செந்தில் ராஜன் நடவு செய்தாா். பாரதி நூலகத்தை முதன்மைக் கல்வி அலுவலா் முனியசாமி திறந்துவைத்தாா். பவள விழா மலரை முன்னாள் ஆசிரியா் எமிலி எலிசபெத் வெளியிட முன்னால் மாணவா்கள் பெற்றுக்கொண்டனா்.