நீலகிரி

கூடலூரில் குடியரசு தினவிழா

DIN

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சித்தராஜ் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா். கூடலூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் பரிமளா தேசியக் கொடியேற்றினாா். ஆணையா் பிரான்சிஸ் சேவியா் மற்றும் மன்ற உறுப்பினா்கள் அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா். கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் கீா்த்தனா தேசியக் கொடியேற்றினாா்.

ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகத்தில் தலைவா் சுனில் தேசியக் கொடியேற்றினாா். கூடலூா் அரசுக் கல்லூரியில் துணை முதல்வா் சண்முகம் தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்றினா். கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஐயப்பன் தேசியக் கொடியேற்றினாா். மேலாண்மைக் குழு உறுப்பினா் சா்மிளா, நகா் மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்துகொண்டனா். ஓவேலி பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் துறை அலுவலகங்கள், பள்ளிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT