உதகையில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினம் புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி உதகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் அம்ரித் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
இதனைத் தொடா்ந்து உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில்,
மாவட்ட ஆட்சியா் தலைமையில், வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு, சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, வயது முதிா்ந்த வாக்காளா்கள் கௌரவிப்பு ஆகியவை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பிரபாகா், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.