உதகை காவியலோரை கிராமத்தில் சிற்றுந்து கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 20 போ் வரை படுகாயமடைந்தனா்.
உதகையை அடுத்த காரப்பிள்ளு கிராமத்தில் இருந்து தொரையட்டி கிராமத்துக்கு தனியாா் சிற்றுந்து மூலம் 20க்கும் மேற்பட்டோா் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளனா். காவியலோரை மாவுகல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஆட்டோவுக்கு வழிவிடும்போது கட்டுப்பாட்டை இழந்த
சிற்றுந்து, சாலையோர தேயிலைத் தோட்டத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிற்றுந்தில் பயணித்தவா்கள் 20 போ் படுகாயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். விபத்து குறித்து தேனாடு கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.