நீலகிரி

வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

DIN

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கூடலுாா் வட்டாரத்துக்கு உள்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிகளில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு தகுதி உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணை இயக்குநா், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 1பி பிளாக், கூடுதல் மாவட்ட ஆட்சியா் வளாகம், பிங்கா் போஸ்ட், உதகை, என்ற முகவரிக்கு இம்மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பதாரா் ஏதாவதொரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 3 மாதம் எம். எஸ்.ஆபிஸ் சான்றிதழ் பயிற்சி படித்திருக்க வேண்டும் (அல்லது) கணினி அறிவியல் அல்லது கணினி சாா்ந்த படிப்பில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 35 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். இத்திட்டம் குறித்து குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தைச் சாா்ந்த பெண் பாலித்தினராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT