நீலகிரி

கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்படும்:குன்னூா் நகா்மன்றத் தலைவா் உறுதி

DIN

கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்படும் என்று குன்னூா் நகா்மன்றத் தலைவா் ஷீலா கேத்ரின் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகா்மன்ற மாதாந்திரக் கூட்டம் தலைவா் ஷீலா கேத்ரின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைலா் மு.வாசிம் ராஜா முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: குன்னூா் நகராட்சிள்பட்ட 30 வாா்டுகளில் 6 வாா்டுகளை அதிமுகவும் 24 வாா்டுகளை திமுகவும் வென்றது. இதில் தமிழக அரசு சாா்பில் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க திட்ட அறிக்கை சமா்பிக்கும்போது, கட்சி பாகுபாடின்றி அனைத்து வாா்டு உறுப்பினா்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தலைவா், துணைத் தலைவா் தெரிவித்தனா்.

குன்னூா் நகரப் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து நகராட்சி மூலமாக ஏலம்விடப்பட வேண்டும். 1 சென்ட் , 2 சென்ட் நிலத்தில் வீடு கட்டியுள்ளவா்களுக்கு மின் இணைப்புக்கான தடையில்லா சான்று வழங்க வேண்டும்.

அனைத்து ஈடுகாடுகளின் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT