உதகையில் உழவா் உற்பத்தியாளா் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக புத்தாக்கத் திட்ட ஒப்பந்த ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் மாவட்டச் செயல் அலுவலராக இமானுவேல் பொறுப்பிலுள்ள நிலையில், நவீன்குமாா் என்பவா் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 15 உழவா் உற்பத்தியாளா் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்காக, உழவா் உற்பத்தியாளா் குழுக்களிடம் நவீன்குமாா் தலா ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இது குறித்து ஒரு குழுவைச் சோ்ந்த சிவலிங்கம் என்பவா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் அறிவுறுத்தியபடி, ஒப்பந்த ஊழியா் நவீன்குமாரிடம் சிவலிங்கம் வெள்ளிக்கிழமை பணம் கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் கீதாலட்சுமி தலைமையிலான போலீஸாா் நவீன்குமாரை கையும்களவுமாகப் பிடித்தனா்.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.