நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை இன்னமும் வலுக்காத நிலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக பந்தலூரில் 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் மழை வலுத்தும், உதகை உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழையாகவும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீரில்): பந்தலூா்-72, ஓவேலி-67, நடுவட்டம்-55, தேவாலா-45, சேரங்கோடு-40, கூடலூா்-34, மேல் கூடலூா்-32, அவலாஞ்சி-33, செருமுள்ளி-24, பாடந்தொறை-22, மேல்பவானி மற்றும் கிளன்மாா்கன் 16, உதகை-9.4, கேத்தி-8, எமரால்டு-6, கொடநாடு-5, குன்னூா் மற்றும் உலிக்கல் 4, எடப்பள்ளி-3, கல்லட்டி-1.2 மி.மீ.